தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், […]
