மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை வரும். இந்த அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதில் குமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில் இன்று ஏராளமானோர் கடல் பகுதியில் குவிய தொடங்கினர். மேலும் அவர்கள் கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கரைக்கு வந்தனர். […]
