அம்மா உணவகத்தில் போதுமான வருமானம் இல்லை என்று ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவக திட்டத்தை ஆரம்பித்து 3 வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்கினார். இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்டு லட்சக்கணக்கானவரின் பசியைப் போக்கி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 403 அம்மா உணவகங்களில் 4,000 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் […]
