நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகடி கிராம பஞ்சாயத்து தலைவரான டி.ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தை ‘மதகடி தலைஞாயிறு பஸ் ஸ்டாப்பில்’ அனுசரித்தவர்கள், பிற சமூகத்தை பற்றி இழிவுபடுத்தி பேசியதாக இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. […]
