சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை சஞ்சனாவை காணவில்லை என்று குழந்தையின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் […]
