அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணாமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்து சேவைகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல் தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் […]
