தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
