மாநில அரசை பரிந்துரை செய்யாமல் தானாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரரான முத்தரசன், இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு அதனை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது ஓபிசி மாணவர்களுக்கு மத்திய […]
