தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதி […]
