தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியை கிளப்பியுள்ளது. இதனால் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணர் ஒருவர் இந்தியாவில் அடுத்த மாதம் ஒமிக்ரான் வைரஸ் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டு அறிவியலின் தலைவரான டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே […]
