காபூல் விமான நிலையத்திற்கு அருகில், அமெரிக்க படை, கடந்த 29-ம் தேதி அன்று நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அமெரிக்க அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை, தங்கள் குடிமக்களோடு, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களையும் சேர்த்து விமானம் மூலம் மீட்டுவிட்டது. இதனிடையே மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடந்த சமயத்தில், கடந்த மாதம் 26ம் தேதியன்று, அங்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின், ஹரசன் […]
