ஆலுவாவில் உள்ள சுற்றுலா இல்லத்தில் யூடியூப் பிரபலம் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் உள்ள சுற்றுலா இல்லத்தில் யூடியூப் பிரபலம் ஒருவர் இறந்து கிடந்தார். உயிரிழந்தவர் ‘ஞான் ஒரு காக்கநாடன்’ என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட திருக்காக்கரையைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின்படி, கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கந்துவட்டி மாஃபியாவிடமிருந்து அவருக்கு மிரட்டல் வந்ததும் தெரியவந்தது. […]
