ஏனங்குடி பேருந்து நிலையம் அருகில் அபாய நிலையில் மின்கம்பம் உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். நாகை மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஏனங்குடி ஊராட்சியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திருமருகல்- நன்னிலம் மெயின் ரோட்டில் ஏனங்குடி பேருந்து நிலையம் அருகில் ஒரு மின்கம்பம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பம் எந்த நேரம் வேண்டுமென்றாலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. நாகூர், நாகப்பட்டினம், திட்டச்சேரி, திருமருகல், நன்னிலம், திருவாரூர், கும்பகோணம், […]
