சாலை வரி செலுத்தாமல் சென்ற தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்தப் பேருந்து சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பேருந்தில் கோவையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு தொழிலாளர்களை […]
