தம்பி அண்ணனை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கரை கிராமத்தில் முருகேசன்-இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரவிக்குமார் ,ராம்குமார் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரவிக்குமார் குடித்துவிட்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராம்குமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் தனது வீட்டில் இருந்த கல்லால் ரவிக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
