நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் குறித்த கூட்டத்திலிருந்து, பாஜக சார்பில் பங்கேற்ற வானதி வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த ஐந்தாம் தேதி அன்று, தொடங்கியது. இக்கூட்டத்தின் இரண்டாம் நாளில் நீட் தேர்வை விலக்குவதற்கான அரசின் நிலை தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் நம் போராட்டம் சிறிதளவும் பின்வாங்காமல் முன்னோக்கி செல்லவேண்டும். இதற்கான, நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்ட தீர்மானித்திருக்கிறோம். […]
