அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டியில் கூறியதாவது, “கவர்னரை திருப்திப்படுத்தவே அதிமுக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீட்டுக்கு எதிராக நாங்கள் போர்க்கொடி தூக்குவோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் தருவோம் என கூறி வரும் அதிமுக நீட்டுக்கு எதிராக நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி […]
