காகிதமில்லா நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று பெற வேண்டியது மிகவும் முக்கியம். இதனை டிஜிட்டல் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் காகிதமில்லா நிர்வாகம் என்ற நடைமுறைப் ஊக்கப்படுத்தப்படுகிறது. […]
