தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை […]
