அந்தியூர் ஏரி நீர்வழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 18 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து நீர் வெளியேறி வரக்கூடிய பாதையில் உள்ள கண்ணப்பன் கேட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் பரத், பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மின்வாரிய […]
