அந்தமான் பகுதிகளில் அசானி புயல் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி, நேற்று முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக மெதுவாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ‘அசானி புயல்’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. […]
