காதலித்த பெண் கடைசி நேரத்தில் வேறு ஒருவருடன் சென்று விட்டதால், வேறு வழியின்றி அத்தை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் என்பவர் பக்கத்து ஊர் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள […]
