ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, போதிய உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாததால் 5 வயதிற்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வந்தனர். இந்த அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் வெளியிட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான […]
