அத்தியாவசியமான வேலைக்கு செல்பவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தமாக 230 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்களுக்காக சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது. தலைமைச் […]
