Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கி வைத்த OPS….! முடிக்க போகும் சசிகலா….. அதே நாளில் அதிரடி… அதிமுகவில் பெரும் பரபரப்பு ….!!

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. எக்கு கோட்டையாக ஜெயலலிதா காத்துவந்த அஇஅதிமுக தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வின் முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் கழித்த நிலையில் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டபோது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவோம்…! பல எதிர்பார்ப்பில் அதிமுக கோட்டை… சங்கரன்கோவில் தொகுதி ஓர் பார்வை …!!

சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மூன்று முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரையில் இது ஒரு தனித் தொகுதி என்பதனால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இங்கு வெற்றியை தீர் மாணிக்க கூடிய முக்கிய சக்திகளாக உள்ளனர். நகரின் பெருவாரியாக  வருவாய் ஈட்ட  இங்கு  விசைத்தறி தொழிலையே நம்பி இருக்கிறது. மேலும் சங்கரன்கோயில் தொகுதியில்  உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது… ஓபிஎஸ் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2வருஷம் ஆகிட்டு…! ஒண்ணுமே செய்யல…. சும்மா நாங்க இருந்து எதுக்கு ? அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டுத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரையை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் அவையில் ஆளுனர் பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நான் எழுந்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆளுநர் அவர்கள் என்னை பேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் இணைப்பு ? சசிகலா தமிழகம் வரட்டும் தெரியும்…! பாஜக தலைவர் பதில் …!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா பெங்களுருவில் ஓய்வு எடுத்து வருகின்றகிறார். அவரை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்தான கேள்விக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், சசிகலாவின் வருகை எப்படி இருக்கும் என்பதை அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது நமக்கு தெரியும். சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் நாங்கள் எடுபடவில்லை என தெரிவித்தார். மேலும், இந்த பட்ஜெட் அருமையான பட்ஜெட், வளர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணைத்தலைவர் ஓபிஎஸ்… சொந்த ஊரில் போஸ்டர்… அதிமுகவில் பரபரப்பு… வெடித்தது சர்ச்சை…!!!

தமிழகத்தின் துணைத் தலைவர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சி நிறை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”வை மிஞ்சிய எடப்பாடியார்…! சாதனை முதல்வராக அசத்தல்… புருவம் உயர்த்தும் அண்டை மாநிலங்கள் …!!

தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்கள் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்த ஒரு சில முக்கிய தீர்மானங்கள் குறித்த சிறிய தொகுப்பை பார்க்கலாம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதையே  தமிழக அரசு தனது நிலைப்பாட்டாக கொண்டுள்ளது. அவர்களின் விடுதலைக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி மேல் பாஜக தான்…! ஒன்னும் செய்ய முடியாது…! இது காலத்தின் கட்டாயம்… அதிமுக அமைச்சர் பேச்சு …!!

மத்தியில் ஆளும் பாஜக வை இன்னும் 10 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது என அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்உள்ள பாஷிரா பாத் பகுதியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு 568 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இஸ்லாமிய பெண்கள் நிறைந்திருந்த அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் வருது..! புதிய திட்டம் இருக்கு…. மக்களுக்கு இன்று சர்ப்ரைஸ் …!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும், ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தாமதமாகியுள்ளது. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். விரைவில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளுநர் உரையில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் நேரம்…! முதல் தலைமுறை வாக்கு… ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி… மாஸான திட்டம் தொடக்கம் …!!

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று தொடங்கி வைத்தார்.  கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஏப்ரல் வரை   தினம் தோறும் 2ஜிபி டேட்டா  வழங்கப்படும் என்று ஜனவரி 11ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் – அதிமுகவில் பரபரப்பு …!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூர் சிறையில் பெற்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா விடுதலையைவால் போஸ்டர் ஒட்டி, கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மீது அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விவகாரம் …! பிரதமருடன் எம்பி திடீர் சந்திப்பு… அதிமுகவில் பரபரப்பு….!!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்திருக்கிறார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முன்னாள் மக்களவை துணை சபாநாயகராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை. பிரதமர் மோடியை இந்த தருணத்தில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்திலேயே ஒருபக்கம் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருவில் இருக்கும் குழந்தைக்கும் இரட்டை இலை பிடிக்கும்… முதல்வர் ஈபிஎஸ் புகழாரம்…!!!

தமிழகத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்கும் என முதல்வர் பழனிசாமி புகழாரம் பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் அலங்கோலங்கள்?… அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலம்…!!!

தமிழகத்தில் அதிமுக அரசால் அமைக்கப்பட்டு வரும் அம்மா மினி கிளினிக் அலங்கோலமாக உள்ளது என கமல் ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக – அமமுக இணைப்பு?… புதிய பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் அமமுக இணைக்கபடுமா என்ற கேள்விக்கு கேபி. முனுசாமி அதிரடியாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிகலாவுக்கு ஆதரவு போஸ்டர் பெரிய விஷயமா ? அசால்ட் கொடுத்த அமைச்சர்…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே சசிகலா விடுதலையானது முதல் தற்போது வரை அதிமுகவினர் பலரும், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என சசிகலாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அவர்கள் மீது அதிமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் சிவி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிரடி காட்டிய சின்னம்மா…! சசிகலா எப்படி அதை செய்யலாம் ? வெகுண்டெழுந்த அமைச்சர் …!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்த காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,கொடியை பொருத்துவதற்கு எந்தவிதமான உரிமையும் அவர்களுக்கு கிடையாது. ஏற்கனவே கட்சியின் சட்ட விதிகளில் தெளிவாக குறிப்பிட்டு விட்டோம். ஒருவர் வெளியே சென்று புதிய கட்சியை ஆரம்பித்து விட்டாலும், தனியாக செயல்பட்டாலும் அவர்களின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெளியே வந்ததும் அதிரடி…! காரில் அதிமுக கொடி…. ஆட்டத்தை தொடங்கிய சின்னமா …!!

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும், அவரின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் கட்சி கொடியை சசிகலாவின் காரில் இடம்பெற்றிருக்கிறது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவர் சில காலங்கள் இருந்தார், அதன் பின்னராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள். இதனிடையே சசிகலா வெளியே வந்தால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா காரில் அதிமுக கொடி…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, கடந்த கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவருக்கு, கடந்த 20-ம் தேதியே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி, சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினர். தற்போது, கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களின் ராஜமாதாவே வருக வருக!!… சசி-க்கு போஸ்டர்… அதிமுகவில் குழப்பம்…!!!

தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தினமும் ஒருவரை நீக்கும் அதிமுக தலைமை… ஈபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக கட்சியில் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமைச்சர்கள் 3 பேர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் புதிய பரபரப்பு… சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு… வெடித்தது சர்ச்சை…!!!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் திடீரென சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலையானார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி மக்களால் முதல்வர் ஆகல…. எல்லாமே சசிகலா தான்… எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விவாதங்கள், அதிமுக – சசிகலா என சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் ? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுக தலைமை சசிகலாவுக்கு ஆதரவாக  செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் கூட்டணியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சற்றுமுன் சசிகலா உடல்நிலை…. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபட்டு வருவதாக விக்டோரியா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி வல்லவராக இருக்கலாம்…. ஆனால் இங்கு வேண்டாம்… கருணாஸ் பரபரப்பு பேட்டி …!!

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருவரை முதல்வராக கொண்டுவந்தவர் சசிகலா. அதிமுக தலைமை சசிகலாவிடம் சென்றுவிடக் கூடாது என மோடி, அமித்ஷா கவனமாக இருந்தனர். கூவத்தூரில் என்ன நடந்தது என அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அதிமுகவிற்கு பின் பாஜக  இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, உண்மை ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல 10 ஆண்டுகளாக… மக்களை ஏமாற்றும் அதிமுக… ஸ்டாலின் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களை அதிமுக ஏமாற்றி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா”…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை இருந்த சசிகலா தண்டனை முடிவடைந்து நேற்று விடுதலையானார். இதை அடுத்து இவர் அரசியலுக்கு வருகை தந்தால் பெரிய மாற்றங்கள் வருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவின் விடுதலை மாற்றங்களை ஏற்படுத்துமா? மேலும் சசிகலா அதிமுகவில் இணைவாரா என்று பல கேள்விகள் எழுப்பப் பட்டது. இதற்கு அதிமுகவில் சசிகலா இணைவதற்கு சாத்தியமில்லை என்று முதல்வர் திட்டவட்டமாகக் கூறினார். அதிமுகவில் பலர் சசிகலா வருகையால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் எச்சரிக்கையை மீறிய அதிமுக நிர்வாகி… பரபரப்பு செய்தி…!!!

தமிழக முதல்வர் பழனிசாமியின் எச்சரிக்கையை மீறி அதிமுக நிர்வாகி செயல்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெ.பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விளைவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடைய திருவுருவச்சிலை அரசு சார்பாக முதல் முறையாக உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் முன்னிலையில் இந்த முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். முழு உருவச்சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றிய போது, மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ஜெயலலிதா பிறந்தநாள்…. தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு …!!

ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். வரக்கூடிய பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா வருகிறது. இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உயர்கல்வி மன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிலைக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு காந்தியடிகள், உவேசா, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் என பல்வேறு தலைவர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் ஆட்சி அமைப்பேன்… ஜெவின் நினைவிடத்தில் முதலமைச்சர் சபதம்…!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 15 மீட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு குட்பை சொல்லும் தேமுதிக… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கருத்து…!!!

சசிகலா பற்றி தேமுதிக ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்து அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பழனிசாமி மக்களால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா வருகையை EPS, OPSகொண்டாடுறாங்க…! ”அதிமுகவை கைப்பற்றுவோம்”… டிடிவி அதிரடி பேட்டி …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை பெற்றார். அவர்க்கும் கொரோனா தொற்று இருப்பதால் பெங்களுருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலை ஆகி விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை எங்களது தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கின்றேன். மருத்துவர்களைப் பார்த்துவிட்டு சசிகலாவை எப்போது நாங்கள் அழைத்துச் செல்லலாம் என்பதை விவாதித்து, அவர்களின் ஆலோசனை பெற்று ஓய்வு தேவைப்படும் என்றால் ஓய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாஸ் காட்டும் அமைச்சர்… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க…!!!

சென்னையில் ஜெயலலிதா நினைவிடதிறப்பு விழாவிற்காக அதிமுக தொண்டர்கள் 1500 பேரை மதுரையிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜு அழைத்து வந்துள்ளார். சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்க – முதல்வருக்கு முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் வன்முறை வெடித்தது. போராட்டகுழுக்களுக்கும் சமூக விரோதிகள் நுழைந்து விட்டதாக போராடும் விவசாய சங்கங்கள் கருது தெரிவித்தன. இதனியிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த நிபந்தனையும் இன்றி ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்று சுவரொட்டி…! கலக்கிய நெல்லை அதிமுக…. ஒன்றிணைந்த கழகம் …!!

சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு சுப்ரமணிய ராஜா கூறுகையில், தங்களுக்கு எப்போதுமே சின்னம்மா தான் பொதுச்செயலாளர் என்றும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு….! இன்று சசிகலா விடுதலை… எதிர்பார்ப்பில் கழகத்தினர் …!!

இன்று காலை சரியாக 10 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலா விடுதலை செய்யப்பட இருக்கின்றார். பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து நேரடியாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலாவிடம் கையொப்பம் வாங்கி சிறைத் துறையின் ஆவணங்கள், கோப்புகளில் கையெழுத்து வாங்குகின்றார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று விடுதலையாகும் சின்னம்மா…! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் …!!

பெங்களூருவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொற்று அறிகுறிகள் நீங்கி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று முறைப்படி அவரை விடுவிக்கும் ஆவணங்களை அவரிடம் வழங்குகின்றனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சிக்கு வந்தால்… 100 நாட்களில் சரி செய்யுறோம்… கெத்து காட்டிய முக.ஸ்டாலின் அறிவிப்பு …!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கின்ற தலைப்பில் மக்களை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது, தமிழகம் அதிமுக ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்களுக்கு துரோகம் செய்வது போன்றவற்றை தான் அதிமுக செய்கிறது. எந்த தொகுதிகளிலும் புதிய திட்டங்கள் இல்லை.மக்களுக்கு அவர்களது அடிப்படை வசதிகளைக் கூட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

10,600இல்ல… 21,000போய்டுச்சு…! 1,25,00,000 மக்கள் OK சொல்லிட்டாங்க… அதிமுகவை நடுங்க வைத்த புள்ளி விவரம் …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், கொரோனா காலத்தில் தமிழக மக்களை அரசு கைவிட்டது. திமுக ஆட்சியில் இல்லாத எந்த சூழ்நிலையிலும் திமுக மக்களை கைவிடல. அதற்கு உதாரணம் தான்  ஒன்றிணைவோம் வா என்ற அற்புதமான திட்டம். அதைத்தொடர்ந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நம்முடைய கழக முன்னணியினர் ஏறக்குறைய 20 பேர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம்  கிராமத்திலிருந்து நகரம் வரை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் ஆகிய நான்…! 100 நாட்களில் அதிரடி… ஸ்டாலின் சொன்ன மாஸான திட்டம் …!!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வழக்கமா தேர்தல் அறிக்கையை வழங்குவோம். தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்போம். அதுதான் திமுக தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்க கூடிய வழக்கம். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவைப்படுது. அதை ஊடகங்கள் மூலமாக நான் அறிவிக்கிறேன். மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக அரசின் சாதனைகள் இதோ…! கலைஞர் வீட்டில் பட்டியலிட்ட ஸ்டாலின் …!!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும், எல்லா வகைகளிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தினுடைய கடன்சுமை 5 லட்சம் கோடி, எல்லா துறைகளிலும் பல ஆயிரம் கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து இருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை – துணை முதல்வர் அதிரடி ட்விட் …!!!

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான ட்விட் பதிவை பதிவிட்டிருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்தும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தான் என்று சொல்லியிருக்கிறார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அம்மா அரசு உறுதியான நிலைப்பாட்டு என்ற பதிவிட்டுள்ள அவர், விரைவில் நல்ல தீர்வு வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்கியமானத பேசணும்…! தேர்தல் வேற நெருங்குது… எல்லாரும் சென்னைக்கு வாங்க… திமுக அதிரடி அழைப்பு …!!

திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் அறிவாலயத்தில் நடைபெறும் என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆலோசிக்கபட இருப்பதால், இது முக்கிய கூட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் விஷயங்கள், சமீபத்தில் கிடைக்க வேண்டிய நிதி, நிவர் புயல் நிவாரணங்களில் தமிழகத்துக்கு தேவையான இழப்பீட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருடம் அதிமுக அமைச்சர்…! அதிருப்தியில் மக்கள்… வாணியம்பாடி தொகுதி ஒரு பார்வை …!!

சிறுபான்மையினர் பெரும்பாலும்  வசிக்கக்கூடிய, தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடமான புல்லூர் பகுதியையும்,  காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் தன்னகத்தே கொண்ட பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தொல்பொருட்கள் நிறைந்த தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக் கூடியது வாணியம்பாடி. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம், ஆலங்காயம் இரண்டு  பேரூராட்சிகள் உள்ளன. 45 ஊராட்சிகள் இருக்கின்றன. கடந்த தேர்தல்களை பார்க்கும் பொழுது இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பெரும்பாலான கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலை பொருத்த வரையில் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

7பேரை விடுதலை செய்தால்….! இது தான் எங்களின் முடிவு…. தமிழக காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு …!!

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல…2இல்ல… 8தடவை இப்படியா ? 40நிமிடம் உக்காந்தீங்க…! எதுக்கு போகாம இருக்கீங்க ? சொல்லி காட்டும் ஸ்டாலின் …!!

“ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய ஓ. பன்னீர்செல்வம், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தேனியில் பேசிய முக.ஸ்டாலின், ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை பார்த்து சிரிச்சாரு…! நீதி செத்து போச்சு… இதை விட மாட்டேன்…!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்பு, ஓ.பி.எஸ். அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு சட்டமன்றம் நடக்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் நான் உட்கார்ந்து இருந்தபோது, ஓ.பி.எஸ். முதலமைச்சராக உட்காருகிறார். உட்கார்ந்த சில மாதங்களில் அவர் பதவியை பறித்து விட்டார், சசிகலா. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ போட்டு இருந்தாரு…! யாராவது பாத்தீங்களா ? உத்தமராக கையெடுத்து கும்பிட்டாரு …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, துவக்கத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. இங்கே 10 பேர் பேசுவதற்காக பெயர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேசவைக்க வாய்ப்பில்லை, நேரமில்லை. நிறைவாக நான் நீண்ட நேரம் பேசுவேன். இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றை மட்டும் இப்போது உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யப்பாடி..! இவ்வளவு கூட்டமா ? சந்தோஷமா இருக்கு மக்களே… OPS மாவட்டத்தில் வியந்த ஸ்டாலின் …!!

கிராம சபை கூட்டத்தால் நாம் பல தேர்தல்களில் வென்றுள்ளோம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இப்போது இந்த கிராம சபைக் கூட்டத்தை தொடங்கப் போகிறோம். மகிழ்ச்சியாக, பூரிப்பாக, வந்திருக்கும் உங்களையெல்லாம் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், தலைமைக் கழகத்தின் சார்பிலும் […]

Categories

Tech |