முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு […]
