தமிழகத்தில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏ மற்றும் பி என்ற 2 படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை அ.தி.மு.க சார்பில் சமர்ப்பிப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு […]
