இலங்கையில் அமைச்சர்கள் 26 பேரின் ராஜினாமாவை அதிபர் கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து மக்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் அதிகரித்ததால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொழும்பு நகரத்தின் வீதிகளில் தீவிர சோதனை பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவில் நடந்தது. […]
