Categories
உலக செய்திகள்

இன்று வெளியானது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்…. பெரும்பான்மையை இழந்தார் பிரான்ஸ் அதிபர்…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியானது. நாடாளுமன்றத்தில் 577 ஆசனங்களில் இம்மானுவேல் மேக்ரோன் கட்சிக்கு 245 ஆசனங்கள் மட்டும் தான் கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவர் பெரும்பான்மையை இழந்திருக்கிறார். 289 ஆசனங்கள் பெற்றால் தான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், மேக்ரோன் அரசுக்கு, கட்சிகளின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இப்படியான ஒரு நெருக்கடி […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிராக நடந்த போராட்டங்கள்…. பிரான்சில் வெடித்த கலவரம்….!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நேற்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கொள்கைகளை எதிர்க்கும் வகையில் கருப்பு ஆடை அணிந்து கொண்டு நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மே தினமான நேற்று போராட்டங்கள்  நடந்திருக்கிறது. அப்போது அவர்கள் வணிகக்கட்டிடங்களில் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் காவல்துறையினர் மீது பொருட்களையும் கண்ணீர் புகை குண்டுகளையும் […]

Categories
உலக செய்திகள்

என் திட்டத்தை போரிஸ் கெடுத்துவிட்டார்…. கோபத்தின் உச்சியில் மேக்ரான்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு சென்றதால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தனது ஆலோசகர்களிடம் உக்ரைன் விவகாரம் தொடங்கப்பட்டதிலிருந்து போரிஸ் ஜான்சன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தான் பெரிதாக எதையோ செய்துவிட்டது போன்று அவர் தன்னை காண்பித்து கொள்வது எரிச்சலூட்டுகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தல்…. முதல் சுற்று முடிவில்… இமானுவேல் மேக்ரான் முன்னிலை…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரான்சில் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான் இரண்டாவது தடவையாக அதிபர் தேர்தலில் களமிறங்கினார். தேர்தலில் 12 அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதன்படி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இமானுவேல் மேக்ரான் 28.50% வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது கட்ட தேர்தலுக்காக கடின உழைப்பு தேவை என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியில் கோல் அடித்து கலக்கிய அதிபர்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரான்ஸில் மருத்துவமனை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் அதிபர் இமானுவேல் மக்ரோன் கோல் அடித்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரான்ஸ் மற்றும் பாரிஸ் மருத்துவமனையின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட Poissy-ல் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல பிரபலங்கள் ஒரு அணியிலும், மருத்துவமனையின் முன் களப்பணியாளர்கள் மற்றொரு அணியும் விளையாடியுள்ளார்கள். #Macron a inscrit un but sur pénalty avec le Variétés […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச அங்கீகாரம் பெற…. தலீபான்கள் இதனை பின்பற்ற வேண்டும்…. பிரான்ஸ் அதிபர் அளித்த நிபந்தனைகள்….!!

தலீபான்கள் சர்வதேச அளவிலான அங்கீகாரம் பெற பிரான்ஸ் அதிபர் சில நிபந்தனைகளை அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கடந்த செவ்வாய் கிழமை அன்று பிரபல வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கூறியதாவது, “வருகின்ற ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்கான் நாட்டிற்கான சர்வதேச அங்கீகாரம் குறித்த நிபந்தனைகளை தெளிவான செய்தியாக தலீபான்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் பெண்களுக்கான சமத்துவம், வெளிநாட்டினரை மனிதாபிமான முறையில் அணுகல் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார்!”.. பிரான்ஸ் அதிபர் உறுதி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, ஐ.நா சபை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில்,  ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் அரசு உறுதியளிக்கிறது. இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

“பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை!”.. பிரான்ஸ் அதிபர் தலைமையில் திடீர் கூட்டம்..!!

இஸ்ரேல் நாட்டின் பெகாஸஸ் உளவு மென்பொருளை வைத்து பிரான்ஸ் அரசை எதிர்த்தவர்களை உளவு பார்த்தார்கள் என்று கூறப்பட்டதால், இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான விசாரணை இன்று துவக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO என்ற நிறுவனம் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்தது. இதனை வைத்து இந்தியா போன்ற 50 நாடுகளின் அரசை எதிர்த்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் இது நடந்திருக்கிறது. எனினும் தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. மேலும் இந்த […]

Categories

Tech |