விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டதால் தாய் ஆடு பரிதாபமாக இறந்தது. இதனால் குடிக்க பாலின்றி தவித்த 3 ஆட்டுக்குட்டிகளையும் சக்திவேல் திருமலைபுரத்தில் வசிக்கும் பதினெட்டு என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார். அவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆனால் அந்த 3 குட்டிகளுக்கும் பிற ஆடுகள் […]
