விவசாயி ஒருவரின் வீட்டில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்று குட்டியை பார்ப்பதற்காக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20- க்கும் அதிகமான மாடுகளை வளர்த்து வருவது மட்டும் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்தக் கன்றுக்கு கால்கள் கிடையாது. இதனால் அந்தக் கன்று தவழ்ந்து தவழ்ந்து அங்க இங்கேன்னு செல்கிறது. […]
