தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி கொண்டிருப்பதால் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
