விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அதிக அளவிலான கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த கல் குவாரியிலிருந்து ஜல்லி கற்கள் மற்றும் செயற்கை மணல்கள் போன்றவை லாரியின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு லாரியை பயன்படுத்தி […]
