இன்றைய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குற்றங்கள் நடக்கும் போது அதை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிக்கப்படுகிறார். இதனால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில், உலகளவில் சென்னை 3ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. […]
