இந்தியாவில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் சென்ற ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் அல்லல் பட்டனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். […]
