பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்க முயன்ற மர்ம நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பாரிஸின் 18வது மாவட்டத்தில் இருக்கும் ரூ போயினோடு என்ற பகுதியில் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் குடும்ப வன்முறை புகார் ஒன்றை விசாரிப்பதற்காக ஒரு குடியிருப்பிற்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வெளியில் நின்றிருந்த ஒரு அதிகாரி மீது மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். […]
