முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி விலக்கு, கல்லூரி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதியினர் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து சரிவர குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் […]
