சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 12ம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,37,317 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் அதிக சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த படியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவிகிதமும் ராமநாதபுரம் 97.02 சதவிகிதமும் […]
