மூன்று வருடங்களுக்கு முன்பு அண்ணியை உயிருடன் எரித்து கொலை செய்த கொழுந்தன் தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சடைய மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி சிவகலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அருகில் அவர் சகோதரர் ஸ்ரீகண்டன் வீடு உள்ளது. ஸ்ரீகண்டனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். […]
