மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்வது நாகரீகம் அற்றது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்டகால போராட்டமாகவே உள்ளது எனவும், நீர்வழிப்பாதைகளை மரித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம் எனவும், அவர் கூறினார். […]
