சசிகலாவின் அண்ணன் மகன் ஆன விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா சென்னையில் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் அதிக அளவில் மாத்திரை கொண்டு உள்ளதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விவேக் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
