மருதாநதி அணையில் 2 கோடி ரூபாய் செலவில் மதகுகளை சீரமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மதகுகள் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் அணையின் அமைக்கப்பட்ட மதகுகள் துருப்பிடித்து அரிப்பு ஏற்பட்டு, தற்போது தண்ணீர் கசிந்து வருகின்றது. இந்நிலையில் அதிகாரிகள் மதகுகளை சீர் அமைப்பதற்காக நபார்டு வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் உதவி பெற்றுள்ளனர். இதனை அடுத்து மருதாநதி அணையில் […]
