அணையில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனூரை சேர்ந்தவர் முத்துகுமார். முத்துகுமாரின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் சென்றுள்ளார். ஆனால் குற்றால அருவியில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர்கள் செங்கோட்டை அருகே உள்ள அணை பகுதிக்கு குளிக்க சென்றனர். அங்குள்ள மோட்டை அணையில் முத்துக்குமார் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். […]
