அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள சூரநாடு மின்வாரியத்தில் ரெகு, விஜீ என்ற 2 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது அணில் ஒன்று அங்கு அமைந்துள்ள மின்கம்பியில் நின்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிலை மின்சாரம் […]
