அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்கும் என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக நிவர் மற்றும் புரெவி புயல் வந்து புரட்டிப்போட்டு சென்றன. ஆனால் என்னவோ இந்த இரண்டு புயலினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது புரெவி புயல் கரையை கடந்த […]
