அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி கார்டன் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி பணி முடிந்து ஜெயலெட்சுமி தனது சகோதரர் ராஜா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்குப் பின் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் […]
