Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரயிலில் அடிப்படை வசதிகள் இல்லை…. பயணிகளுக்கு ரூ.20,000 இழப்பீடு….. அதிரடி உத்தரவு…..!!!!!

ரயில் பயணத்தின்போது அடிப்படை தேவைகள் இல்லாததால் பயணிகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 ஆயிரம் வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த குருவாசலில் சசிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ.சி பெட்டியில் ராஜஸ்தானின் பிகானேரிலிருந்து கோழிக்கோடு நோக்கி பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் 2013 ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினர். அதாவது, கழிவறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுகள் நிரம்பி […]

Categories
தேசிய செய்திகள்

திமுக எம்எல்ஏக்களுக்கு பாரபட்சம்…. தரையில் அமர்ந்து மக்கள் பணி…. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் மேஜை, நாற்காலி கொடுக்காமல் சட்டப்பேரவை செயலகம் பாரபட்சம் செய்வதால் திமுக சம்பத் தரையில் அமர்ந்து மக்கள் பணியை கவனித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியே அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத்திற்கு 10 அடிக்கு 10 அடி அளவிலான அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையானதை முதலில் செய்யுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… வீட்டில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள்…!!

குமரகிரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரியில் உள்ள சிவன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கட்சி வேட்பாளர்  கூறுகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி தவிக்கும் இருளர் இன மக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கும் இருளர் இன மக்களின் அவல வாழ்க்கையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பூதக்குலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக தாங்களாகவே மண் பாதையை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வேண்டும் என்றால் அருகிலுள்ள கிராமங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தண்ணி வசதி, கரண்ட் வசதி எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் இரவு நேரம் வந்தால் பாம்பு, விஷப்பூச்சிகள் வருகின்றது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  வண்டிகள் எதுவும் செல்ல முடியவில்லை. அதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார்.

Categories

Tech |