துருக்கி நாட்டில் வசிக்கும் செங்கிஸ் என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார். விலங்கினத்தின் ஆர்வலரான இவர் நாய்களின் மீது பிரியம் கொண்டவர். இவர் நாய்களுக்கென்று தன்னுடைய மருந்துக்கடையில் ஒரு பகுதியை படுக்கைக்கு வசதியாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு நாய் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து சாப்பாடு வைத்தபோது நாய் அதை சாப்பிடாமல் அவரைப் பார்த்து தன்னுடைய காலை நீட்டி உள்ளது. அப்போது தான் நாயின் காலில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருப்பதை அவர் பார்த்துள்ளார். இந்நிலையில் நாய் தன்னுடைய […]
