வடக்கு அந்தமான் கடல், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக் கடல், அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடக்கு அந்தமான் […]
