பல்வேறு முறையில் கடன் வழங்கும் தொடர்பான ஆப் மூலம் முறைகேடுகள் நடைபெறுவதால் இந்த செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: “கூகுள், ப்ளே ஸ்டோரில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடன் வழங்குவது தொடர்பான செயலிகள் ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்படவில்லை. அதாவது loan appஇன் நடைமுறைச் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவை. இந்த ஆப்களை பயன்படுத்துவோரின் செல்போனில் இருந்து அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்டவர்களின் தனி உரிமை மீறும் வகையில் […]
